For Daily Alerts
Just In
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு
புலிகள் குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான முறையிலும், விரிவான முறையிலும் இந்தமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிகவும் துல்லியமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Comments
English summary
The tiger population in the country has risen to 1,706 in 2010 from 1,411 in 2006, the latest Tiger Census released today said, thanks to sustained conservation efforts. The census, which was the most comprehensive and scientifically conducted exercise so far, used cameras installed at strategic points like water bodies in forests, as also in respective territories of big cats. Computers were used to analyse and collate the data.
Story first published: Monday, March 28, 2011, 15:10 [IST]