ஆஸியில் பாதிரியாராக ஜான் டேவிட்?-குழப்பத்தில் போலீஸ்

ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத போலீசார் அவரைத் தேடிப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
1996ம் ஆண்டு நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டார் ஜான் டேவிட். அவருக்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டேவிட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவரது இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு உடனே கடலூர் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு நேற்று உத்தரவிட்டது.
ஆனால், தன்னை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்ததும் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகவும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், டேவிட் இருப்பிடம் குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே டேவிட் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications