இந்தியாவின் ஐபிஎல்லுக்கு போட்டியாக இலங்கையின் எல்பிஎல்!!
கொழும்பு: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லைப் போல, இலங்கையில் எல்பிஎல் எனும் பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சாதனையாளர் கபில்தேவால் உருவாக்கப்பட்டது ஐசிஎல் (இந்திய கிரிக்கெட் லீக்). ஜீ குழுமத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ கடுமையாக எதிர்த்ததது. அதில் விளையாடிய வீரர்களுக்கெல்லாம் தடை போட்டது. இதனை எதிர்த்து ஐசிஎல் வீரர்கள் நீதிமன்றத்துக்குப் போய் ஜெயித்ததெல்லாம் தனிக் கதை. கடைசியில் அந்த ஐசிஎல்லை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பிசிசிஐ உருவாக்கிய அமைப்புதான் இப்போதைய ஐபிஎல்.
அணிகளின் பெயர்கள் கூட, ஐசிஎல்லில் இருப்பதைப் போன்றே காப்பியடித்து வைத்தனர். ஐசிசியை கைக்குள் வைத்திருக்கும் தைரியத்தில் தன்னை மீறி யாரும் கிரிக்கெட் அமைப்பை உருவாக்கிவிடக் கூடாது என சர்வாதிகார எண்ணத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
ஐசிசியின் ஒத்துழைப்பின்மை மற்றும் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைத் தர மறுப்பது போன்ற பல்வேறு தடைகளால் ஐசிஎல் முடங்கிப் போனது.
இப்போது ஐபிஎல் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த நிலையில், ஐபிஎல்லை அப்படியே காப்படியடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் எல்பிஎல் எனும் போட்டியை இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் போட்டியிலும் ஐபிஎல் போன்றே அணிகள் உருவாக்கப்படுகின்றன. கிழக்கு இலங்கை, தெற்கு இலங்கை, மத்திய மாகாண அணி என்றெல்லாம் அணிகள் உருவாக்கப்பட்டு, அதில் சர்வதேச ஆட்டக்காரர்களை ஆட வைக்கும் முயற்சயில் உள்ளது இலங்கை.
இதில் முன்கூட்டியே இடம்பெற்றுவிட்டார்கள் பாகிஸ்தான் வீரர்கள். ஷாகித் அப்ரிதி தலைமையில் ஒரு அணி எல்பிஎல்லில் ஆடுகிறது. வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாடும் வீரர்களுக்கான ரேட் அன்றைய அவர்களது 'மார்க்கெட்' மதிப்புக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.
இலங்கையின் இந்த கிரிக்கெட் அமைப்புக்கு ஏற்கெனவே ஐசிசி அனுமதி அளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications