தலித் பெண் தலைவருக்கு அரிவாள் வெட்டு-ஜெயலலிதா தலையிட சிபிஎம் கோரிக்கை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணியை தாக்கிய சமூக விரோதிகள் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சி.பி.எம். கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியின் தலைவராக கிருஷ்ணவேணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தலித் சமுதாயத்தை (அருந்ததியர்) சேர்ந்தவர்.
ஒரு தலித் பெண் ஊராட்சித் தலைவராக செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், இவருக்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வந்துள்ளதோடு மிரட்டியும் , இவர் ஊராட்சித் தலைவராக செயல்படுவதற்கு தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தியும் வந்துள்ளனர்.
இப் பிரச்சனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில், கடந்த ஜூன் 13 ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியை சாதி வெறி கொண்ட ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் கிருஷ்ணவேணி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஏற்கனவே இவரை மிரட்டியும், இடையூறும் செய்து வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத்தால் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இத் தாக்குதல் நடத் திய சாதி வெறி கொண்ட சமூக விரோத சக்திகளையும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இப் பிரச்சனையில், தமிழக முதல்வர் உடனே தலையிட்டு கிருஷ்ணவேணியைத் தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும், கிருஷ்ண வேணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம் என்று அக்கட்சி கோரியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications