10 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்
நெல்லை: பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (5-ம் தேதி) 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்த உள்ளனர்.
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கியின் பணிகளை தனியார் ஏஜென்சிகளிடம் கொடுக்கக் கூடாது, வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும், நிலுவையில் உள்ள கத்தேல்வால் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கடந்த சில வருடமாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாயக்கவில்லை.
இந்த நிலையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் நாளை (5-ம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.