மீண்டும் 5000 புள்ளிகளைத் தாண்டிய நிப்டி
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்றைய பெரும் சரிவுக்குப் பின் இன்று ஓரளவு ஏற்றம் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 260.42 புள்ளிகள் உயர்ந்து 16,676.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
டிஎல்எஃப், ஜிந்தால் ஸ்டீல், சன் பார்மா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஜெய்ப்ரகாஷ் அசோசியேட்ஸ், ஹீரோமோட்டோகார்ப், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர், சிப்லா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன.
ஓஎன்ஜிசி, ஐடிசி, டாடா பவர், எல் அண்ட் சி, பார்தி ஏர்டெல், பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் இன்று ஏற்றம் காணப்பட்டது. நிப்டி மீண்டும் 5000 புள்ளிகளைத் தாண்டியது. நிஃப்டி 81.40 புள்ளிகள் அதிகரித்து 5001.00 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.