For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

Jawahirullah
மதுரை: மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.

இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மோகன்தாஸ்.

இந்த தீர்ப்பு காரணமாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் அவருடன் தொடர்புடைய நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

English summary
Manithaneya Makkal Katchi MLA M H Jawahirullah was today sentenced to one rigorous imprisonment by a court here for receiving unauthorised overseas donations for a relief fund set up by them in 1997.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X