மின் கட்டண உயர்வை இப்போதைக்கு அறிவிக்காது மின்வாரியம்?

பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்விலை, பேருந்து கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டன. பஸ் கட்டண உயர்வை ராவோடு ராவாக போக்குவரத்துக் கழகங்கள் அமல்படுத்தின. பால் விலை உயர்வும் அமலுக்கு வந்து விட்டது.
இந்த நிலையில், மின்சாரக் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று மக்களிடையே பீதி நிலவிக் கிடக்கிறது.
ஏற்கனவே பேருந்து கட்டணம், உயர்த்தப்பட்டதற்கும், பால் விலை உயர்வுக்கும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியும் எதிர்ப்பு வலுத்துள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் இந்த கட்டண, விலை உயர்வு குறித்துதான் பேசிக் கொண்டுள்ளன். அதிமுக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மின்கட்டண உயர்வு எந்தளவிற்கு 'ஷாக்' அடிக்குமோ என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தற்போதைய தலைவர் கபிலனின் பதவிக்காலம் 2012, ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. மின்கட்டணத்தை திருத்துவதாக இருந்தால் குறைந்தது 4 மாத கால அவகாசம் ஆணையத்திற்குத் தரப்பட வேண்டும்.
ஆனால் தற்போது கபிலன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதால், மின் கட்டணம் இப்போதைக்குத் திருத்தப்பட வாய்ப்பில்லை. மேலும் நான்கு மாத கால அவகாசம் தேவை என்பதால் குறைந்தது ஏப்ரல் மாதம் வரை மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் நம்பலாம்.
கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. மின்சாரச் சட்டம்-2003ன் படி, ஒழுங்கு முறை ஆணையத் தலைவரை தேர்வு செய்ய மாநில அரசு ஒரு தேர்வுக் கமிட்டியை அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.அந்தக் குழு புதிய தலைவரின் பெயரை அரசுக்குப் பரிந்துரைக்கும்.
ஆனால் கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கமிட்டியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. எனவே இப்போதைக்கு மின் கட்டண திருத்தம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications