மதுரையில் பயங்கரம்-காவல் நிலையத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவனுக்கு வலைவீச்சு
மதுரை: காவல் நிலையத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன்(43). லாரி டிரைவர். அவருக்கு முத்துலட்சுமி(36) என்ற மனைவியும், பாரதிராஜா(6), மகாலிங்கம்(5), ஜெயக்குமார்(3) என்ற 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த மாதம் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முத்துலட்சுமி தலைமறைவானார். முத்துலட்சுமியின் தந்தை ஆலடி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவையி்ல் உள்ள ஒரு தனியார் மில்லில் முத்துலட்சுமி வேலை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து அழைத்து வரப்பட்ட முத்துலட்சுமியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நேற்று காலையில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன், முத்துலட்சுமி ஆகியோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சமாதானமாக செல்ல 2 பேரும் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் 3 குழந்தைகளையும் யார் வளர்ப்பது என்பதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துலட்சுமியின் கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த போலீசார் முத்துலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்த கண்ணன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி அஸ்ரா கார்க் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தலைமறைவாக உள்ள கண்ணனை பிடிக்க சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணன், முத்துலட்சுமி தம்பதியரின் 3 குழந்தைகளும் 2 வீட்டாரிடமும் ஒப்படைக்கப்பட்டது. முதல் 2 குழந்தைகளை கண்ணன் வீட்டாரும், 3வது குழந்தையை முத்துலட்சுமியின் வீட்டாரும் வளர்க்க முடிவு செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications