அன்னிய முதலீட்டை எதிர்த்து டிசம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் கடையடைப்பு
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரும் திட்டத்தை திரும்ப பெறக்கோரி டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதன் தலைவர் விக்கிரமராஜா,
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் மட்டும் 20 லட்சம் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை சார்ந்து ஏறக்குறைய 1 கோடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந் நிலையில் சில்லறை வணிகத்தை அன்னிய நிறுவனங்கள் கையில் ஒப்படைத்தால் 1 சில லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகிறார்.
இது கேலிக் கூத்தாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பவர்களை இடைத் தரகர்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டையும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் 100 சதவித அன்னிய முதலீட்டையும் அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரமைப்பு சார்பில் 5 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
நாடு முழுவதும்...
வரும் டிசம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்த அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு டெல்லியில் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தமிழகத்தில் உள்ள வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் அழைப்பு குறித்து எங்களின் அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசினோம்.
இதில் அகில இந்திய வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று வரும் டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications