அணை குறித்து கேரள அரசு பொய் பிரசாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புகார்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. கேரளாவின் பிரச்சாரத்தில் துளி கூட உண்மையில்லை.
நில அதிர்வால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. பழைய அணை பலமாக இருப்பதால் புதிய அணை கட்டுவதற்கான பேச்சுக்கே இடம் தரக்கூடாது. இந்த விஷயத்தில் வீண் புரளி கிளப்புவதை நிறுத்துமாறு கேரள அரசிற்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் புதிய அணை கட்டுவதாக கேரள அதிகாரிகள் பேசி வருவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications