முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசலாம்- ஜெ.வுக்கு பிரதமர் அழைப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு தொடர்பாக கேரளாவின் சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள பதில் கடிதம்:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாங்கள் எழுதிய முந்தைய கடிதங்களையும் கடந்த 29-ந் தேதி எழுதிய கடிதத்தையும் பெற்றேன். அவற்றில் நீங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை கவனத்தில் கொண்டுள்ளேன். அதுபோல, கேரள அமைச்சர்கள் குழுவினர் என்னை சந்தித்து தெரிவித்த பிரச்சினைகளையும் கேட்டேன்.
தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி முன்பு இந்த விவகாரம் இருப்பதை அவர்களிடம் தெரிவித்தேன். மக்கள் மத்தியில் பீதி கிளப்பும் விதமாக அர்த்தமற்ற வகையில் பேசவோ, செய்யவோ கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மேலும், இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலமாக பரஸ்பர, சுமூகமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும் என கருதுகிறேன். எனவே, நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அர்த்தமுள்ள கவலைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications