4,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் சிட்டி பேங்க்!

உலகெங்கும் இந்த வங்கியில் 2,67,000 பேர் பணியாற்றுகின்றனர். வங்கியின் செலவுகளைக் கட்டுப்படுத்த, இதில் 2 சதவீதம் பேரை (4,500 ஊழியர்கள்) பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட் அறிவித்துள்ளார்.
பணி நீக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வங்கிக்கு ரூ. 200 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆண்டுதோறும் சுமார் ரூ. 10,000 கோடியளவுக்கு செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 7,000 கோடியளவுக்கு செலவைக் குறைத்துவிட்டோம்.
கடந்த ஆண்டில் சிட்டி வங்கியின் வருமானம் 86 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 61 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதாரம் காரணமாக அந்த நாடுகளில் எங்களது சேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளோம். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளைத் தான் குறி வைத்து எங்களது வர்த்தக நடவடிக்கைகளை பரவலாக்கி வருகிறோம் என்றார்.
ஏற்கனவே, பேங்க் ஆப் அமெரிக்கா, கோல்ட்மேன் சேக்ஸ், பேங்க் ஆப் நியூயார்க் மெல்லோன், சுவிஸ் வங்கியின் யுபிஎஸ் ஆகியவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications