கிங்பிஷர் எபெக்ட்!: இந்திய விமான நிறுவனங்களில் 26% அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு திட்டம்

கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கு உதவும் வகையில், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அதே நேரத்தில் தனது நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறி, சகட்டுமேனிக்கு விமானங்களை ரத்து செய்து, பயணிகளை திண்டாட வைத்த விஜய் மல்லையா, விமானப் போக்குவரத்துத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி மத்திய அரசு நெருக்கி வந்தார்.
மத்திய அரசை நெருக்குவதற்காகக் தான், திடீரென விமான சேவைகளை அவர் ரத்து செய்யதாகவும் பேச்சு உண்டு. மல்லையாவைப் போவலே பிற விமான நிறுவனங்களும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்கு நெருக்குதல் தந்து வருகின்றன.
பெரும் பணக்காரர்களான இந்த முதலாளிகள் அரசியல்ரீதியிலும் நெருக்கடி தந்து வருவதையடுத்து, இந்தத் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று இந்திய விமானப் போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முதலில் 24 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று கூறிய விமானப் போக்குவரத்துத்துறை, இப்போது அதை 26 சதவீதம் வரை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தத்துறையின் அமைச்சராக இருப்பவர் கேரளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான வயலார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்துறையின் இந்த பரிந்துரைக்கு திட்டக் கமிஷனும், உள்துறை அமைச்சகமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சகம், இதன்மூலம் பங்குச் சந்தை விதிகள் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.
இப்போதைக்கு இந்தத்துறையில் சரக்குப் போக்குவரத்து விமான சேவை நிறுவனங்களில் மட்டுமே 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இனி பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்களிலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 26 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications