முறைகேடு புகார் எதிரொலி- அச்சுதானந்தன் மகனின் பிஹெச்டி பதிவு ரத்து
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மகன் கேரள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பதிவை பல்கலைக்கழக சிண்டிக்கேட் குழு ரத்து செய்துள்ளது.
கேரள முன்னாள் முதல்- மந்திரியும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனின் மகன் அருண்குமார். இவர் கேரள அரசின் மனித உரிமை ஆராய்ச்சித் துறையில் உயர் அதிகாரியாக உள்ளார். இவர்
கேரள பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற பதிவு செய்ததில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பல்கலைக்கழக சிண்டி கேட் குழு அருண்குமார் மீதான புகார் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வில் அருண்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனவே அவரது விண்ணப்ப பதிவு தகுதி இல்லாதது என சிண்டிகேட் குழு முடிவு செய்து அவரது பதிவை ரத்து செய்துள்ளது.
புதிய அறிவிப்பு
கேரள பல்கலைக்கழகம் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி 7 வருடம் ஆசிரியர் பணி முடித்தவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் பிஹெச்டி பட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில்தான் அருண் குமார் டாக்டர் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதில்தான் அருண்குமார் முறை கேடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்தே அவரது பதிவை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின்னர் அருண் குமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications