முல்லைப் பெரியாறு விவகாரம்: குமுளி நோக்கி சென்ற காங். எம்.பி. ஆரூண் உள்பட 350 பேர் கைது

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. ஆரூண் தலைமையில் திரளானவர்கள் தமிழக எல்லையில் உள்ள குமுளி நோக்கிச் சென்றனர். அத்துமீறி குமுளிக்குள் நுழைய முயன்ற ஆருண் உள்பட 350 கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குமுளி நோக்கி திருமா நாளை நடைபயணம்:
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நாளை தேனியில் இருந்து குமுளி நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள ஆட்சியாளர்களும், கேரள அரசியல்வாதிகளும் திட்டமிட்டு உருவாக்கி வரும் பதற்றநிலையை இப்போது உச்ச நீதிமன்றம் சற்றே தணித்திருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழக மக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரளத்தவர்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை காக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எனது தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தேனியில் இருந்து குமுளி நோக்கி நடைபயணம் நடைபெற உள்ளது.
இன்றைய தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications