தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!
உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.
அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications