10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வேலை நாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலை அளிப்பவர்களுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகியப் பணிகளை மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், வேலை நிலவரத் தகவல் சேகரித்தல் மற்றும் தொகுத்தல், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டு வருகிறது.
இவைதவிர மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் திறனற்றோர், தொழில்நுட்பத் திறனுடையோர் ஆகியோருக்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கி வரும் வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மட்டுமே சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதர 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
ஆண்டுதோறும், அதிக அளவில் படித்த இளைஞர்கள் உருவாவதால், வேலை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வேலை வாய்ப்பகங்களில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் வரும் வேலை நாடுபவர்களுக்கு, தேவையான பணிகளை ஆற்றுவதற்கு, தகுந்தவாறு நல்லதொரு சூழ்நிலை இல்லாத நிலைமை நிலவுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 2011-12-ம் ஆண்டில் நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுக்கோட்டை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 இடங்களிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையினால் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகங்கள் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் பெற்று நல்ல முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications