10 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வேலை நாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலை அளிப்பவர்களுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகியப் பணிகளை மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், வேலை நிலவரத் தகவல் சேகரித்தல் மற்றும் தொகுத்தல், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டு வருகிறது.
இவைதவிர மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் திறனற்றோர், தொழில்நுட்பத் திறனுடையோர் ஆகியோருக்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கி வரும் வேலைவாய்ப்பக அலுவலகங்கள் மட்டுமே சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதர 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
ஆண்டுதோறும், அதிக அளவில் படித்த இளைஞர்கள் உருவாவதால், வேலை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வேலை வாய்ப்பகங்களில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் வரும் வேலை நாடுபவர்களுக்கு, தேவையான பணிகளை ஆற்றுவதற்கு, தகுந்தவாறு நல்லதொரு சூழ்நிலை இல்லாத நிலைமை நிலவுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 2011-12-ம் ஆண்டில் நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுக்கோட்டை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 இடங்களிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையினால் மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகங்கள் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் பெற்று நல்ல முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications