'தானே' புயல்: கடலுக்கு செல்லாத தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி: மீனவர்கள் இடையே பிரச்சனை, 'தானே' காரணமாக கடந்த 12 நாட்களா தூத்துக்குடி மீனவர்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்று கடந்த 17ம் தேதி புன்னைகாயல் கடல் பகுதியில் மீ்ன் பிடித்ததாக அப்பகுதி மீனவர்கள் சிறை பிடித்தனர். அந்த படகை மீட்டு தருமாறு தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் ரிக்கை விடுத்தனர். படகை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த 24ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட படகு விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து 27ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இந்நிலையில் வங்க கடலில் 'தானே' புயல் மையம் கொண்டதால் கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தில் 2ம் எண் புயல எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 12 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைந்து விட்டது. இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் மீன் விலை கடுமையாக உயர்ந்தது.












Click it and Unblock the Notifications