ஜன. 13ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து ஜனவரி 13ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரயில் ஒன்று விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. இதற்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அனைத்து ரயில்களிலும் மக்கள் டிக்கெட் எடுத்து விட்டனர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு அவையும் கூட நிரம்பி விட்டன.
இந்த நிலையில் கூடுதல் ரயில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஜனவரி 13ம் தேதியன்று ஒரு பகல் நேர சிறப்பு ரயில் விடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ் போல இந்த பகல் நேர சிறப்பு ரயிலில் இருக்கை வசதி மட்டும் இருக்கும். மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படும். 5 முன்பதிவுப் பொட்டிகளும், 13 பொதுப் பெட்டிகளும் கொண்டதாக இது இருக்கும். ரயில் ஜனவரி 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
ஜனவரி 17ம் தேதி மறு மார்க்கத்தில்
மறு மார்க்கத்தில் ஜனவரி 17ம் தேதி நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications