சபரிமலை: பொன்னம்பல மேடு நோக்கி ஊர்வலமாக சென்ற தந்திரியின் பேரன் உள்ளிட்ட 1,000 பேர் கைது
சபரிமலை: மகர விளக்கு ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற சபரிமலை தந்திரி மகன் ராகுல் ஈஸ்வர் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர்.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஆண்டுதோறும் தை ஒன்றாம்நாள் மகரவிளக்கு ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா ஞாயிறுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. மகரஜோதி விழாவானது சபரிமலையில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு செயற்கையானது என்றும் மலைவாழ் மக்கள் தான் விளக்கேற்றி வழிபடுகின்றனர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் தீபம் ஏற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்தது.
இந்த நிலையில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மலை அரைய மகா சபா, ஐக்கிய மூல அரைய மகா சபா போன்ற மலைவாழ் மக்கள் சங்கங்கள் தேவசம் போர்டு மகரவிளக்கு ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மலைவாழ் மக்கள் மகரவிளக்கை ஏற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஞாயிறன்று தந்திரியின் பேரன் ஈஸ்வர் மற்றும் மலை அரைய மகாசபாவை சேர்ந்தவர்கள் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்லமுயன்றபோது எரிமேலி அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வர், நாங்கள் வன்முறை சம்பவங்களில் எதுவும் ஈடுபடவில்லை. உரிமையை பாதுகாக்க கோரி ஊர்வலமாக சென்றபோது கைது செய்ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். மகரவிளக்கு ஏற்றுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேவசம் போர்டுக்கு உரிமை:
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ். சிவக்குமார், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மட்டுமே மகரவிளக்கு ஏற்ற உரிமை உண்டு என்று கூறினார். பலவித சர்ச்சைக்கிடையே ஞாயிறு மாலையில் மகரவிளக்கு ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications