சபரிமலை: பொன்னம்பல மேடு நோக்கி ஊர்வலமாக சென்ற தந்திரியின் பேரன் உள்ளிட்ட 1,000 பேர் கைது
சபரிமலை: மகர விளக்கு ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற சபரிமலை தந்திரி மகன் ராகுல் ஈஸ்வர் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர்.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஆண்டுதோறும் தை ஒன்றாம்நாள் மகரவிளக்கு ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா ஞாயிறுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. மகரஜோதி விழாவானது சபரிமலையில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு செயற்கையானது என்றும் மலைவாழ் மக்கள் தான் விளக்கேற்றி வழிபடுகின்றனர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் தீபம் ஏற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்தது.
இந்த நிலையில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மலை அரைய மகா சபா, ஐக்கிய மூல அரைய மகா சபா போன்ற மலைவாழ் மக்கள் சங்கங்கள் தேவசம் போர்டு மகரவிளக்கு ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மலைவாழ் மக்கள் மகரவிளக்கை ஏற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஞாயிறன்று தந்திரியின் பேரன் ஈஸ்வர் மற்றும் மலை அரைய மகாசபாவை சேர்ந்தவர்கள் பொன்னம்பல மேட்டினை நோக்கி ஊர்வலமாக செல்லமுயன்றபோது எரிமேலி அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வர், நாங்கள் வன்முறை சம்பவங்களில் எதுவும் ஈடுபடவில்லை. உரிமையை பாதுகாக்க கோரி ஊர்வலமாக சென்றபோது கைது செய்ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். மகரவிளக்கு ஏற்றுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேவசம் போர்டுக்கு உரிமை:
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ். சிவக்குமார், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மட்டுமே மகரவிளக்கு ஏற்ற உரிமை உண்டு என்று கூறினார். பலவித சர்ச்சைக்கிடையே ஞாயிறு மாலையில் மகரவிளக்கு ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications