சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த இருந்த 5 சாமி சிலைகள் மீட்பு: ஒருவர் கைது
சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு 5 சாமி சிலைகளை கடத்த முயன்ற நபர், விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் நேற்று இரவு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சாமி சிலைகள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தராஜுலு(35) என்பவர் பெரிய அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்த போது, தான் பேங்காக் செல்வதாகவும், தனக்கு தேவையான பொருட்கள் அட்டைப் பெட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தனர். அதற்குள் இருந்த இன்னொரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 5 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளின் மதிப்புகளை அறிய தொல்லியல் துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.
விசாரணையில், சிலைகளை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாகவும், பேங்காக்கில் உள்ள தனது நண்பர்களுக்காக சிலைகளை எடுத்துச் செல்வதாகவும் கோவிந்தராஜுலு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் மேலும் விசாரமை நடந்து கொண்டிருக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications