ரூ.380 கோடி செலவில் நாகை துறைமுகம் மேம்பாடு - முதல்வர் ஜெயலலதா உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது துறைமுகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. துறைமுக மேம்பாடும், தொழில் வளர்ச்சியும் ஒன்றொடொன்று இணைந்துள்ளது. இதனால் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் மூலம் சிறு துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தை பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் ரூ.380 கோடி செலவில் அனைத்து பருவகால நிலைக்கேற்ப ஆழ்கடல் கப்பலனை மற்றும் பசுமை சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் துவங்கும் முதல் ஆண்டில் சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, அதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி வருமானம் கிடைக்கும்.
இது படிப்படியாக வளர்ச்சி பெற்று 25வது ஆண்டில் சுமார் 60 லட்சம் டன் சரக்குகள் கையாளும் நிலைக்கு உயரும். இதன்மூலம் சுமார் ரூ.120 கோடி வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும்.
தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இத்துறைமுகத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான அத்தியாவசிய துறைமுக இணைப்பு வசதி இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள இப்பகுதிகளில் அதிக வேலை வாய்ப்பு வசதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications