அய்யா, என் வீட்டைக் காணலே...போலீஸில் புகார் கொடுத்த அரசு ஊழியர்
புதுச்சேரி: வைகைப் புயல் வடிவேலு பட காமெடி பாணியில், புதுவையில் ஒரு அரசு ஊழியர், தனது வீட்டைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்(58). புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் அலுவலகத்தில் டெப்போ மேலாளர். இவருக்கு கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வேகா கொல்லை கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் பண்ணைவீடு இருந்தது.
கடந்த 30ம் தேதி வீசிய தானே புயலில் இவரது கூரை வீடு சின்னாபின்னமானது. தோப்பில் 40க்கும் மேற்பட்ட பலா மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால், இவர் வீடு இடிந்ததை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால், இவருக்கு அரசிடம் இருந்து நிவாரண உதவி கிடைக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த சந்திரமோகன், தனது வீட்டை காணவில்லை என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிப் பார்த்த போலீஸார், இது என்ன காமெடி என்று நினைத்து புகாரைப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பகலவனிடம் மனு கொடுத்துள்ளார் சந்திரமோகன். இது குறித்து அவர் கூறுகையில், எனது பண்ணை வீட்டை காணவில்லை என்று, காடாம்புலியூர் காவல்நிலையம், எஸ்.பி, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன் என்றார்.
எஸ்.பி. அலுவலகம் தற்போது புகாரை காடாம்புலியூர் அனுப்பி வைத்துள்ளது. எப்படி வழக்குப் பதிவு செய்வது, என்ன நடவடிக்கை எடுப்பது என்று காவல் நிலையத்தில் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் காவலர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications