திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி
டெல்லி: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இப்போதைய விதிகளின்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் ஆகிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணித் திறன் 30 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆய்வு செய்யப்படுகிறது. இந் நிலையில் பொது நலன் கருதி, சிறப்பாக செயல்படாத இந்த பிரிவு அதிகாரிகளுக்கு இடையிலேயே ஓய்வு பெறச் செய்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி இனிமேல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகளின் பணித் திறன் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.
இந்த ஆய்வின்போது, குறிப்பிட்ட அதிகாரிகள் திறமையாகச் செயல்படவில்லை என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்.
அடுத்தக் கட்டமாக 25 ஆண்டுகள் அல்லது 50 வயதை நிறைவு செய்யும்போது அதிகாரிகளின் பணித் திறன் மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்.) இந்திய போலீஸ் பணி (ஐ.பி.எஸ்.) இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் கடந்த 3 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி இந்த புதிய விதிகளை வகுத்தது. இதற்கு பெரும்பான்மையான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்ததால் புதிய விதிகள் இப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிகாரிகளை பணி நீக்கம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்தப் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என்பதும் இந்த விதிகளில் அடங்கும்.
பணிநீக்கம் செய்யப்படும் அதிகாரிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் அல்லது 3 மாத ஊதியம், படிகளை அளித்து அவர்களை பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications