வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தியது தான் மின்வெட்டுக்கு காரணம்- ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. மின்வெட்டு 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை மின்வாரியம் மறுத்துள்ள போதிலும் சென்னையில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் மற்ற மாவட்டங்களில் 8 முதல் 10 மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மின்வாரியத்தின் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டதுதான் மின்வெட்டு அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மின்வெட்டைக் கண்டித்து தொழில்துறையினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் நிலைமை மோசமடைவதைத் தடுக்க மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மின்சாரம் என்பது அடிப்படை தேவை. இதை தடையின்றி வழங்குவதை சேவையாக கருத வேண்டும். லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கக் கூடாது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
முதல் கட்டமாக மின்வெட்டின் நேரத்தை குறைக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
அடுத்தகட்டமாக மின்வெட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுதல், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் கூறியுள்ளார் ராமதாஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications