தெலுங்கானா இயக்கம் வன்முறை பாதைக்கு திரும்பும்: காங்.எம்பி.எச்சரிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானா தனிமாநிலம் அமைக்காவிட்டால் வன்முறையை மக்கள் கையிலெடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்பி மது கவுட் யாக்ஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தனிமாநிலம் கோரும் இயக்கம் இங்கே செத்துப் போய்விட்டதாக எவரும் கருதிவிடாதீர்கள்.
தங்களுக்கு அரசியல் கட்சிகளும் அரசுகளும் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்ற குமுறலும் நிச்சயம் வன்முறையாக தெலுங்கானா பகுதியில் வெடிக்க நேரிடும்.
தெலுங்கானா அமைப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. உடனேயே தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த அக்டோபர் மாதம் எழுச்சியை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இயக்கங்களின் கூட்டுப் போராட்டம் மீண்டும் வலுவோடு உருவாகும்.
எங்களைப் பொறுத்தவரையில் வன்முறையை விரும்பவில்லை. ஆனால் மக்களை அந்தப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லாதீர்கள். தெலுங்கானா மாநிலம் அமைந்தே தீரும். அது இப்பொழுதா? பின்னரா என்பது மட்டுமே கேள்வி.
தனிமாநிலத்தை அமைத்தால் மத்திய அரசை தெலுங்கானா பகுதி மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். தெலுங்கானாவை பாரதீய ஜனதா கட்சி ஆதரிப்பதால் அதன் செல்வாக்கு இங்கே அதிகரித்துக் கொண்டிருப்பதை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்,
தெலுங்கானா பிரதேச தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுதான் பெரிய பிரச்சனையே என்றார் அவர்.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications