தெலுங்கானா இயக்கம் வன்முறை பாதைக்கு திரும்பும்: காங்.எம்பி.எச்சரிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானா தனிமாநிலம் அமைக்காவிட்டால் வன்முறையை மக்கள் கையிலெடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்பி மது கவுட் யாக்ஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தனிமாநிலம் கோரும் இயக்கம் இங்கே செத்துப் போய்விட்டதாக எவரும் கருதிவிடாதீர்கள்.
தங்களுக்கு அரசியல் கட்சிகளும் அரசுகளும் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்ற குமுறலும் நிச்சயம் வன்முறையாக தெலுங்கானா பகுதியில் வெடிக்க நேரிடும்.
தெலுங்கானா அமைப்பதற்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. உடனேயே தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த அக்டோபர் மாதம் எழுச்சியை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இயக்கங்களின் கூட்டுப் போராட்டம் மீண்டும் வலுவோடு உருவாகும்.
எங்களைப் பொறுத்தவரையில் வன்முறையை விரும்பவில்லை. ஆனால் மக்களை அந்தப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லாதீர்கள். தெலுங்கானா மாநிலம் அமைந்தே தீரும். அது இப்பொழுதா? பின்னரா என்பது மட்டுமே கேள்வி.
தனிமாநிலத்தை அமைத்தால் மத்திய அரசை தெலுங்கானா பகுதி மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். தெலுங்கானாவை பாரதீய ஜனதா கட்சி ஆதரிப்பதால் அதன் செல்வாக்கு இங்கே அதிகரித்துக் கொண்டிருப்பதை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்,
தெலுங்கானா பிரதேச தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுதான் பெரிய பிரச்சனையே என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications