வோடபோன் வழக்கின் தீர்ப்பின் எதிரொலி- சட்ட திருத்தம் பற்றி தொடர் ஆலோசனை

வோடபோன் வழக்கு
வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஹாங்காங்கை சேர்ந்த ஹட்சிஸன் குழுமத்தின், ஹட்சிஸன் - எஸ்ஸார் நிறுவனத்தின், 67 சதவீத பங்குகளை 2007ம் ஆண்டு மே மாதம் வாங்கியது. 1,120 கோடி டாலர் மதிப்பிலான இந்த பரிவர்த்தனைக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை,வோடபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்தியாவிற்கு வெளியே
மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, வரி விதிப்பு பொருந்தாது என வோடபோன் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் , 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர். இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை வருமான வரித்துறை செய்துள்ளது.
வரி ஏய்ப்பு எப்படி?
2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்கள் சில மொரீஷியஸ் நாட்டு பதிவை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி வருமான வரி ஏய்ப்பு செய்கின்றன இத்தகைய வரி ஏய்ப்பை தடுக்க தற்போதைய சட்ட விதிகளில் மாற்றம் செய்யலாம் என்று ஒருதரப்பும் மற்றொரு தரப்பினர் இது வெளிநாடுகளில் எதிர்விளைவை ஏற்படுத்திவிடும் என்று கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளின் மூலமான வருமானவரி ஏய்ப்பும் இந்நிறுவனங்களுக்கு கடிவாளம் போடுவதுதான் இப்போது மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் பிரதான விவகாரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications