சுனாமி எச்சரிக்கையால் வெறிச்சோடிய கூடங்குளம் கடற்கரை கிராமங்கள்
வள்ளியூர்: சுனாமி எச்சரிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடின. பீதியால் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட நேரம் கண் விழித்திருந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதையடுத்து கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.
கூடங்குளம் பகுதியில் உள்ள 12 கடற்கரை கிராமங்களிலும் ஆலய மணி அடித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்தனர். சிலர் பேருந்து, ஆட்டோ, கார்களில் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடல் அலைகள் லேசான ஆக்ரோஷத்தோடு வீசியதால் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் படகுகளை மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தினர். மேலும் படகில் இருந்த மோட்டார்களையும் கழற்றி தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் சுனாமி பற்றிய தகவல்களை அறிய தொடர்ந்து தொலைகாட்சி செய்திகளை நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தனர். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட செய்தி வந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் சுனாமி பீதியால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications