நாளை அட்சய திருதியை: அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறப்பு

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் தங்கத்தின் விலை என்ன தான் விண்ணைத் தொடும் அளவில் இருந்தாலும் அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நாளை அட்சய திருதியை வருகிறது.
இதை முன்னிட்டு ஏராளமான நகைக்கடைகள் மக்களைக் கவரும் வகையில் சலுகைகள் அறிவித்துள்ளன. செய்கூலி இல்லை, கற்களுக்கு விலை இல்லை, நகை வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என்று விளம்பரம் செய்து வருகின்றன.
இதனால் எந்த கடையில் நகை வாங்கினால் அதிக லாபம் என்று கணக்கு போட்டு அநத கடைகளில் போய் நகை வாங்க மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே நகை வாங்க முன்பதிவு செய்யும் வசதியையும் சில கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதையடுத்து முன்பதிவு செய்ய நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் இந்த ஆண்டு விற்பனை அமோகமாக இருக்கும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை அதிகாலை முதலே மக்கள் நகை வாங்க வருவார்கள் என்பதால் தி. நகர், புரசைவாக்கம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் நாளை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும். மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications