என் மீதான குற்றச்சாட்டு தவறானது, வருத்தத்திற்குரியது: கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Karthik Chidambaram
டெல்லி: ஏர்செல்-மாக்சிஸ் விவகாரத்தில் மதிப்புக்குரிய நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் தவறாகப் பயன்படுத்தி, என் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விவாதித்து வருவது வருத்தம் தருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

ஏர்செல்-மாக்சிஸ் விவகாரம் தொடர்பாக பாஜக குற்றம்சாட்டி வருவது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை. எனக்கு ஏர்செல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுவது தவறானது, அவதூறானது, உண்மையற்றது.

மாண்புக்குரிய நாடாளுமன்றத்தில் தவறான, ஆதாரமற்ற புகார்களைக் கூறி தனிப்பட்ட ஒரு இந்தியக் குடிமகன் மீ்து விவாதம் நடத்தி வருவது வருத்தத்திற்குரியது.

நானோ அல்லது எனது குடும்பத்தினர் யாருமோ எந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் பங்குளை வைத்திருக்கவில்லை, வாங்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ஏர்செல் நிறுவனத்திலோ அல்லது மாக்சிஸ் நிறுவனத்திலோ நானோ அல்லது எனது குடும்பத்தினர் யாருமோ எந்தவித பங்கையும் வாங்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+