டெல்லி: ஏர்செல்-மாக்சிஸ் விவகாரத்தில் மதிப்புக்குரிய நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் தவறாகப் பயன்படுத்தி, என் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விவாதித்து வருவது வருத்தம் தருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஏர்செல்-மாக்சிஸ் விவகாரம் தொடர்பாக பாஜக குற்றம்சாட்டி வருவது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை. எனக்கு ஏர்செல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுவது தவறானது, அவதூறானது, உண்மையற்றது.
மாண்புக்குரிய நாடாளுமன்றத்தில் தவறான, ஆதாரமற்ற புகார்களைக் கூறி தனிப்பட்ட ஒரு இந்தியக் குடிமகன் மீ்து விவாதம் நடத்தி வருவது வருத்தத்திற்குரியது.
நானோ அல்லது எனது குடும்பத்தினர் யாருமோ எந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் பங்குளை வைத்திருக்கவில்லை, வாங்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ஏர்செல் நிறுவனத்திலோ அல்லது மாக்சிஸ் நிறுவனத்திலோ நானோ அல்லது எனது குடும்பத்தினர் யாருமோ எந்தவித பங்கையும் வாங்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Karti Chidambaram, son of Home Minister P Chidambaram, today dismissed allegations by BJP MP Yashwant Sinha that he owns five per cent stake in a telecom company which was benefited from the 2G spectrum allocation. In a statement, Karti said it was "deeply regretted" that the privileged forum of Parliament is misused to make "wild and reckless" allegations against a private citizen. "I categorically state that neither I nor any member of amy family have acquired or hold any share in any telecom company. In particular, I categorically state that neither I nor any member of my family have acquired or hold any share in either Aircel or Maxis," Karti said.