சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பரிகாரத்துக்காக ஒன்றரை மாத பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிலகுவா நகரைச் சேர்ந்தவர் பாரதி ராணி (35). அவரது கணவர் தினேஷ் குமார். அவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்பு பிறந்த குழந்தை குணப்படுத்த முடியாத நோய் வந்து இறந்தது. இதையடுத்து அவர்கள் இந்த குழந்தைக்கும் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று ஒரு சாமியாடியைச் சென்று பார்த்துள்ளனர்.
அதற்கு அவர் உங்கள் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தால் அவர்களின் பிற குழந்தைகள் நோய் நொடியின்றி வாழும் என்று பரிகாரம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தம்பதி தங்கள் குழந்தையை புதைக்க மயானத்திற்கு சென்றனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அதன் பெற்றோர் மற்றும் உறவினரை கைது செய்தனர்.
இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை. சாமியாடி பேச்சைக்கேட்டு பாரதி தனது குழந்தையை உயிருடன் புதைத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications