தமிழகத்தில் 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!

எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சுற்றி வருகிறது. இந்த ரயில் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று கன்னியாகுமரி வந்தது.
ரெட் ரிப்பன் ரயில் கண்காட்சி தொடக்க விழா நேற்று கன்னியாகுமரி ரயி்ல் நிலையத்தில் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் முனைவர் டாக்டர் மோகன்தாஸ் கண்காட்சி ரயில் பற்றி விளக்கம அளித்தார்.
பின்னர் மோகன்தாஸ் கூறியதாவது,
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1986ம் ஆண்டு எய்ட்ஸ் பரவியிருப்பது சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96,000 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 62,000 பேருக்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எய்ட்ஸ் நோய் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் 42 எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 782 சிறிய மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ரயில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications