2ஜி: ஐசில் ஆஃப் மேன் தீவுக்கு போன யூனிடெக் நிறுவனத்தின் ரூ. 250 கோடி.. யாருக்கு போனது?..

இந்த பணப் பரிமாற்றத்துக்கும் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும் தொடர்புள்ளதா என்ற விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உசேன் பல்வா ரூ. 200 கோடியை வழங்கிய விவகாரத்தில் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே போல மொரீசியசில் உள்ள டெல்பி நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்குகளை வழங்கியது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த டெல்பி நிறுவனத்துக்கும் ராசாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில், யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆஃப் மேன் தீவுகளில் யூனிடெக் ஓவர்சீஸ் லிமிட்டெட் என்ற துணை நிறுவனம் மூலமாக 'one yield enhancement certificate' என்ற வகையிலான பங்கு பத்திரத்தில் ரூ. 250 கோடி முதலீட்டைச் செய்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பரில் யூனிடெக் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் யூனிடெக் நிறுவனம் இந்த முதலீட்டை நஷ்டமாகக் காட்டி கணக்கை முடித்துவிட்டது.
இது 2ஜி லைசென்ஸ் கிடைத்ததற்கு பிரதிபலனாக யாருக்கோ தரப்பட்ட பணமாக இருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது. இது குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது. இந்த பணப் பரிவர்த்தனை குறித்து விவரம் கேட்டுஸ விரைவில் அந்த நாட்டுக்கு நீதிமன்றம் மூலமாக கடிதம் அனுப்பவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
அதே போல இந்த விவகாரம் குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
Mann என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐசில் ஆஃப் மேன் தீவு, இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே ஐரிஷ் கடலில் உள்ளது. இது ஒரு சுதந்திரமான தீவு என்றாலும், இதன் வெளிவிவகார விஷயங்கள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications