நெல்லையில் டெங்கு காய்ச்சல் ஓழிப்பு பணிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஓழிப்பு பணிகளுக்கு அரசு தரும் ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்கள் வரத் தயங்குவதால், அப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் உதவியுடன் டெங்கு ஓழிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவியது. மாவட்டம் முழுவதும் கடந்த 40 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 45க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்துள்ளது.
தினமும் 300க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படையெடுக்க தொடங்கிய பிறகு தான் அரசு விழித்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது வீடுகளுக்குள் கொசு மருந்து அடிப்பது, ஏடிஎஸ் கொசு முட்டையிடும் வீடுகளுக்குள் உள்ள நல்ல தண்ணீர் சேமிப்பு தொட்டி மற்றும் பாத்திரங்களில் டெமிபாஸ் மருந்து தெளிப்பது ஆகிய 2 விதமாக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்காக மாவட்டத்தில் உள்ள 425 கிராம பஞ்சாயத்திகளிலும் சுமார் 2,125 பேர் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தினமும் ரூ.110 முதல் ரூ.150 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணி இடைவிடாமல் 2 மாதங்களுக்கு நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இப்பணிகளில் ஈடுபட தற்காலிக பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை இருப்பதால் பல கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு இப்பயிற்சி அளித்து இப்பணிக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் வரும் 4ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் அதன்பிறகு இப்பணியை தொய்வின்றி செய்வதில் பெரும் சிக்கல் உள்ளது என்று களப்பணி மேற்பார்வை செய்யும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications