வசூல்ராஜா ஸ்டைலில் காப்பியடித்த 9 எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு
சென்னை: வசூல்ராஜா ஸ்டைலில் தேர்வில் காப்பியடித்த சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 9 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தேர்வில் செல்போனை தொடைக்கு கீழ் வைத்து காதில் கேட்கும் கருவியை மாட்டி காப்பியடித்தனர் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில்
சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 1 மாணவி உள்பட 9 பேர் நூதன முறையில் காப்பியடித்து கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வு அறையில் இருந்த அவர்களுக்கு அதே கல்லூரியில் 2வது ஆண்டு படிக்கும் அறிவுவேல் மற்றும் சபரி செல்வம் என்னும் 2 மாணவர்கள் தான் விடை சொன்னார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகினர். இதையடுத்து அவர்கள் தான் வெளியில் இருந்து விடை சொன்னவர்கள் என்று போலீசார் உறுதி செய்தனர்.
அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினால் விடை சொல்ல அவர்கள் எவ்வளவு பணம் வாங்கினார்கள், இதில் எந்தெந்த பேராசிரியர்களுக்கு பங்கு உள்ளது என்பது தெரிய வரும். இந்நிலையில் போலீசார் இந்த விவகாரம் குறித்த இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள அந்த 2 மாணவர்களைப் பிடித்து விசாரித்த பிறகே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே காப்பியடித்த அந்த 9 பேரின் தேர்வு முடிவுகளை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்கள் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடை சொன்ன இருவரையும் பல்கலைக்கழகம் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதில் அறிவுவேல் விசாரணைக்கு ஆஜரானதாகவும், சபரி செல்வம் டெல்லி சென்றுள்ளதாகவும் விரைவில் விசாரணைக்கு நேரில் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications