தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடித்த 5 சிங்கள மீனவர்கள் கைது
தூத்துக்குடி: தமிழக கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரை அடுத்த மணப்பாடில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை பிற்பகல் தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த விசைப்படகில் 5 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் அந்த 5 பேரையும் பிடித்து கரைக்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், 5 பேரும் இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
காற்று பலமாக வீசியதால் வழிதவறி வந்துவிட்டதாக அவர்கள் கூறினாலும் அதிகளவு மீன்களை பிடித்துச் செல்லும் நோக்கிலேயே துணிச்சலாக தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications