இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்கள் விடுதலை
மன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 30-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேர் கரைக்கு திரும்பவில்லை. அவர்களைத் தேடி மேலும் 5 மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதான நிலையில் அந்த 5 மீனவர்களும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் 10 பேரையும் கைது செய்தது. அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். பல்வேறு இயக்கங்களும் இவர்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்தன.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடற்படையிடம் அவர்களை இலங்கை கடற்படை ஒப்படைக்க இருக்கிறது. இதையத்து அவர்கள் வீடு திரும்புகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications