ரயில்களில் இனி பாட்டு கேட்டுக் கொண்டே பயணம் செய்யலாம்!
ஆனால் இனி அது மாதிரி சிரமப்படத்தேவையில்லை. இனிமையான பயணத்தை ரயில் பயணிகள் மேற்கொள்ளலாமாம். பயணிகளை உற்சாகப்படுத்த ரயில்களில் இசையுடன் பாடலை ஒளிபரப்ப ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அகில இந்திய ரேடியோவின் இசை லைப்ரரியில் இருந்து பாடல்களை எடுத்து ரயில்களில் இசைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.
முதல் கட்டமாக ராஜ்தானி, சதாப்தி டோரன்டோ போன்ற விரைவு ரயில்களில் பிஸ்மில்லா கான், டிஎன் ராஜரத்தினம் போன்ற இசை மேதைகளின் இசைகளை இசைக்க வைக்கும் பணி நடந்து வருகிறது. இனி ரயில்களில் மிகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசையும், பாடலும் ஒலிபரப்பாகும். அதனை கேட்டுக்கொண்டே போரடிக்காமல் பயணம் செய்யலாம்.
ரயிலில் எலி, கரப்பான் பூச்சி தொல்லையை முதல்ல கட்டுப்படுத்துங்கப்பா, பாட்டு அப்புறம் போடுங்க என்று பயணிகள் கூறுவது ரயில்வே நிர்வாகத்தில் காதுகளில் விழுந்தால் சரி.