பல்கேரியாவில் இஸ்ரேலியர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்- ஈரான் மீது குற்றச்சாட்டு
பர்க்ஸ்: பல்கேரியா நாட்டின் பர்கஸ் நகரில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து பல்கேரிய தலைநகர் பர்கஸ் நகருக்கு விமானம் மூலம் 44 இஸ்ரேலியர்கள் நேற்று மாலை வந்தடைந்ந்தனர். அவர்கள் அனைவரும் பேருந்து ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்தப் பேருந்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லபப்ட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜெண்டினா தலைநகரில் யூதர்களின் மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய 85 பேரை பலி கொண்டதும் இதே நாள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா, தாய்லாந்து என்ற
ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.