முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு டிரான்ஸ்பர் உத்தரவு தயாரித்தவர் கைது!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை போலியாகப் போட்டு போலி பரிந்துரைக் கடிதம் தயாரித்தது தொடர்பாக சென்னை அச்சக அதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த இளந்துரை கிராமத்தைச் சேர்ந்த பெமிலா, சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றினார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் குழித்துறை அருகே உள்ள மேல்புறம் பள்ளிக்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விண்ணப்பித்திருந்த பணியிட மாறுதல் விண்ணப்பத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு உத்தரவு அனுப்பியது போல் ஒரு கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துப் போனது. பொதுவாக ஆங்கிலத்தில் முதல்வர் கையெழுத்துடன் கூடிய உத்தரவு கடிதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு செல்வது கிடையாது என்பதால் சந்தேகமடைந்தனர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்
அதே நேரத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு பிரின்ஸ் எட்வின் என்பவர் நேரில் வந்து ஏற்கெனவே வந்த முதல்வரின் கடிதத்தின் நகலை காட்டி ஏன் இன்னமும் ஆசிரியை பெமிலாவுக்கு பணியிட மாறுதல் போடவில்லை என்று மிரட்டியுள்ளார்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு எட்வின் கொண்டு வந்த கடிதம் பொய்யானது என்றும் முதல்வரின் பெயரில் போலி கடிதம் அனுப்பியதும் எட்வின்தான் என்பதும் தெரியவந்தது. எட்வினும் முதல்வரின் கையெழுத்தை போலியாகப் போட்டு உத்தரவு கடிதம் தயாரித்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications