ஓடும் பஸ்சில் 3 பேரைக் கொன்றவர் ஏற்கனவே 25 பேரைக் கொன்ற மன நோயாளி!
சென்னை: ஆந்திராவிலிருவந்து சென்னை வந்த பேருந்தில் பயணித்த 3 பயணிகளை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றும், ஒருவரை படுகாயப்படுத்தியும் தப்பி ஓடிய நபர் மன நோயாளி என்றும், ஏற்கனவே அவர் 25 பேரை ஆந்திராவில் கொன்றுள்ளார் என்றும் அவர் மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தடா காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. தடா பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 3 பேர் பேருந்திலேயே உயிரிழந்தனர். அவர்களுக்கு கழுத்து, நெஞ்சுப் பகுதியில் பலத்த கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரமேஷ் என்ற என்ஜீனியர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்தி கத்தியால் குத்திய நபர் பேருந்திலிருந்து இறங்கி ஓடி விட்டார்.
இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் சாம்பய்யா என்று தெரிய வந்துள்ளது. இவர் ஒரு மன நோயால் பாதிக்கப்பட்ட நபர். கண்ணில் தென்படுகிறவர்களை கத்தியால் குத்தி விட்டு ஓடி விடுவார். இதுவரை 25 பேரை இவர் கொன்றுள்ளாராம். இவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளும் இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில்தான் இவரை பத்திராச்சலம் பகுதியில் வைத்து போலீஸார் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். தற்போது தடா காட்டுக்குள் இவர் தப்பி ஓடி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸார் விரைந்துள்ளனர். மோப்ப நாய்கள் சகிதம் சாம்பையாவைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications