தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? 1 ஸ்கீமுக்கு 10 நொடி?
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது எப்போதும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம், இப்போது அரசியல் களத்திலும், சோஷியல் மீடியாவிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் நூற்றுக்கணக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்ட தகவலே இந்த விமர்சனங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைந்திருக்கிறது.

நேற்று காலை 10.05 மணிக்கு தமிழக அமைச்சரவை துவங்கி, 11.20 மணி வரை நடந்துள்ளது.. அதாவது மொத்தம் 75 நிமிடங்கள் மட்டுமே இந்த முதலாவது அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம்
அனைத்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய மக்கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
குறிப்பாக, முதல்வர் விஜய் பதவியேற்றவுடன் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகளை மூடுதல் மற்றும் சிங்கப்பெண் திட்டம் ஆகிய 3 முக்கிய கோப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது..
மேலும், குறு விவசாயிகளின் பயிர் கடன் போராட்டம், மகளிருக்கான உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் இரவு நேர மின்வெட்டுப் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
72 நிமிட த்தில் 436 திட்டங்களா
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்து, அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. துறைவாரியாக தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய 436 திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திட்டங்களை ஆய்வு செய்த பிறகு முதல்வர் ஒப்புதல் பெறப்படும். அனைத்து துறைகளுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
அப்படியானால் வெறும் 75 நிமிட கால அவகாசத்திற்குள் மொத்தம் 436 திட்டங்கள் குறித்து விரிவாகவும், விரைவாகவும் அலசி ஆராயப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பரவலாக வலுக்க துவங்கி விட்டது.. இத்தனை குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை எவ்வாறு ஆழமாகப் பரிசீலிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
10 வினாடிகளில் ஒரு திட்டம்?
சோஷியல் மீடியாவில் இதை வைத்து, காலக் கணக்கீடுகளை ஆராய துவங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.. அமதாவது மொத்தம் உள்ள 4,500 வினாடிகளில் 436 திட்டங்களை ஆய்வு செய்யும்போது, ஒரு திட்டத்திற்கு வெறும் 10 வினாடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களையும், கிண்டலான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகிறார்களாம்.
ஒரு திட்டத்தின் தலைப்பைக் கூட முழுமையாகப் படிக்க முடியாத இந்த கால அளவில், திட்டங்களின் செயல்பாட்டு வடிவங்களை எப்படி ஆராய்ந்திருக்க முடியும் என்ற கேள்வியும் சீரியஸாகவே எழுப்பப்படுகிறது.
நிர்வாக ரீதியாக, அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாகவே அதிகாரிகள் மட்டத்தில் திட்டங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்படுவது வழக்கம் என்றாலும், கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை இவ்வளவு வேகத்தில் ஒப்புதல் அளிப்பது முதிர்ச்சியான நிர்வாக முறைக்கு உகந்ததா என்ற விவாதமும் அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
யாராக இருந்தாலும் ஆக்ஷன் தான்
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு முதல்வர் விஜய் நேரடியாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றாலும், கூட்டத்தில் அவர் அமைச்சர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எந்தவிதமான காலதாமதமும் இருக்கக்கூடாது என்றும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் அதிகார துஷ்பிரயோகத்திலோ அல்லது நிர்வாக முறைகேடுகளிலோ ஈடுபடக் கூடாது என்றும் முதாமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்படிப்பார்த்தாலும் தவெக அரசின் இந்த முதல் அமைச்சரவை கூட்டம், அதன் வேகமான முடிவுகளுக்காகவும், அது கிளப்பியுள்ள விவாதங்களுக்காகவும் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு உற்றுநோக்கத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது..!!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications