தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் இழப்பீடு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் இழப்பீடு
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் மன் மோகன்சிங் அதிர்ச்சி அடைந்தார். உடனே ரயில்வே அமைச்சர் முகுல்ராயுடன் தொலைபேசியில் பேசி நிலவரத்தைக் கேட்டறிந்து பின்னர் இரங்கல் செய்தி வெளியிட்டார்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியதாவது:
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்து பற்றி பிரதமர் என்னிடம் பேசி இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிதி வழங்க உத்தர விடப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications