விருதுநகரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் சிக்கியது : ரூ. 10 லட்சம் பறிமுதல்

விருதுநகரில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக சனிக்கிழமையன்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் விருதுநகரில் உள்ள ஏழு கிட்டங்கி தெருவைச் சேர்ந்த பாலன் என்பது தெரியவந்தது.
அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டபோது கட்டுக் கட்டாக 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருந்து மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான கம்ப்ïட்டர் மையத்தில் போலீசார் அதிரடியாக சோதனை போட்டனர். இந்த கம்ப்ïட்டர் மையத்தில் தான் 1000 ரூபாய் கள்ள நோட்டு வடிவமைக்கப்பட்டு கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீசார் பாலன் (47), கார்த்திக் (35), அச்சக அதிபர் ராமர் (39) ஆகிய 3 பேரையும் ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் முதன் முதலாக தற்போது தான் 1000 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்திருப்பது தெரியவந்தது. திண்டுக்கல், மதுரை பகுதியில் இந்த கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு முன்பே போலீசார் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விட்டனர். 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் 58 வரிசை எண்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இண்டியன் கரன்சி என்று பெயரிடப்பட்ட இணையதளத்திற்குள் சென்று அதில் இருந்து 1000 ரூபாய் கள்ள நோட்டு வடிவத்தை டவுன்லோடு செய்து அதை கம்ப்ïட்டர் மூலம் கலர் பிரிண்ட் எடுத்ததாக கம்ப்ïட்டர் மைய உரிமையாளர் கார்த்திக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனை வைத்து பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ராமர் என்பவருக்குச் சொந்தமான அச்சகத்தில் 1000 ரூபாய் நோட்டு அளவுக்கு கட்டிங் செய்து புழக்கத்தில் விட திட்டமிட்டு இருந்தபோது போலீஸ் பிடியில் சிக்கி கொண்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஏழு கிட்டங்கி தெருவைச் சேர்ந்த பாலன் என்பவர்தான் கள்ள நோட்டுக்களை அச்சடிப்பதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவர்களுக்கும் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த வேறு கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசாருக்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி நஜ்மல் ஹோடா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications