ரயில் டிக்கெட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி நாடு தழுவிய வேலை நிறுத்தம்

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் பரிசோதகர் பணியிடங்களை நிரப்ப கோரி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கீழ் இயங்கும் சென்னை கோட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் கவுன்சில் சார்பாக, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் அசோக்குமார் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கோட்ட தலைவர் சாரங்கபாணி, செயலாளர் பால் மேக்ஸ்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த போராட்டத்தில் ரயில்வேயில் காலியாக உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு அறை ஒதுக்க வேண்டும். வேலை நேரத்தை முறைப்படுத்தி, வேலைப்பளுவை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த என்.கண்ணையா, டிக்கெட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, வரும் 23ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் டிக்கெட் பரிசோதகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய ரயில்களை அறிவிக்கும் ரயில்வே நிர்வாகம், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க தவறுகிறது. இதனால் பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.
இதனால் ஒரு டிக்கெட் பரிசோதகர் 7 கோச் வரை கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி வரும் 23ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications