விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பழ.நெடுமாறன் போன்றோர் தூண்டுவிட்டது தான் காரணம்: கருணாநிதி தாக்கு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் போர் நடந்தபோது நான்(கருணாநிதி) வாய் மூடிக் கொண்டிருந்தேன் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசை மீறி, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தீர்வு காண முடியும் என்பதை அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள்தான் உணர முடியும். புலிகளுக்கு இடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும், அதனால் தளபதிகளும் மாவீரர்கள் பலரும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும் நெடுமாறன் போன்றோர் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் நன்றாகவே அறிவர்.
நெடுமாறன் கூற்றின்படி நானாவது போரின்போது வாய் திறக்காமல் இருந்தேன் என்பது உண்மையாக இருக்கட்டும். ஆனால் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே தீர்மானம் கொண்டு வந்தார். அது நெடுமாறனுக்கு நினைவு இருக்கிறதா? இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், போர் என்றால் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஜெயலலிதா சொன்னார். அதாவது நினைவு இருக்கிறதா?
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்னைச் சந்தித்தபோது, தனி ஈழம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீர்மானம் கூடாது என்று வலியுறுத்தியதாகவும், அதனை நான் ஏற்றுக் கொண்டதாகவும் நெடுமாறன் கூறியிருக்கிறார். இது பொய். சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்கும் வழக்கமுடைய சிதம்பரம் அன்றும் என்னை அப்படித்தான் சந்தித்தார். மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பாக என்னிடம் அவர் பேசவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் வாழ்வாதாரம் பற்றி மட்டுமில்லை, உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்பதை உள்ளம் இல்லாதோர் அறிய நியாயமில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications