ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியை பறிகொடுத்துள்ளது திமுக: மு.க.ஸ்டாலின்

நெல்லையில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியாதவது,
கடந்த 12ம் தேதி சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துக் கூறத் தான் இந்த கூட்டம். அவை பெயருக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அன்று. அவற்றை செயல்படுத்தக் கோரி தீர்மான நகலை ஐ.நா. சபையிடம் நேரடியாக கொடுக்கவிருக்கிறோம்.
நாங்கள் திடீர் என்று தற்போது தான் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த திமுக மாநாட்டில் ஈழத் தமிழர்களின் உரிமைகளை காக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பின்னரும் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
ஈழத் தமிழர்களுக்காகவே 2 தடவை நாங்களை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். மேலும் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். டெசோ அமைப்பு ஒன்றும் புதிதாக துவங்கப்பட்டதன்று. கடந்த 1985ம் ஆண்டிலேயே டெசோ அமைப்பு துவங்கப்பட்டுவிட்டது.
அந்த அமைப்பில் கி. வீரமணி, பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களான இருந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அப்பொழுதே டெசோ கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். 1986ம் ஆண்டு மதுரையில் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் பாஜக தலைவர் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைப் பற்றி கவலைப்படும் இயக்கமே திமுக. இலங்கை பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்கள் அந்த பிரச்சனையை திமுக தனது கையில் எடுத்தவுடன் எள்ளி நகையாட முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் நடந்த போரின்போது லடக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் ஆதரவின்றி உள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில் திமுகவை அழிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சரி, எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் சரி அதையெல்லாம் பார்த்து அஞ்சுகின்ற இயக்கம் திமுக அன்று. வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் நீதிமன்றத்திற்கு வர தயாராகவே உள்ளேன். தேவைப்பட்டால் கருணாநிதியும் நீதிமன்றத்திற்கு வருவார். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கும் திமுக அரணாக இருக்கும் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications