உதயக்குமார் சரண் அறிவிப்பு... இடிந்தகரையில் கிராம மக்கள் அவசர ஆலோசனை

கூடங்குளம் போராட்டம் நேற்று பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் உள்ளிட்ட போராட்டக் குழுத் தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களை காவல்துறையினரிடமிருந்து காப்பதற்காக போலீஸில் சரணடையத் தயார். முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று இரவு சரணடையத் தயார் என்று உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இடிந்தகரையில் இன்று ஊர் மக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் 20க்கும் மேற்பட்ட போராட்டக் களத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் உதயக்குமாரின் அறிவிப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் உதயக்குமாரின் செய்தியும் கூறப்பட்டது. அதாவது தான் ஊர் மக்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும், அவர்களின் முடிவை அறிய ஆவலாக உள்ளதாகவும், ஒரு வேளை சரணடைவதாக இருந்தால் இடிந்தகரை மக்களை வந்து சந்திக்க விரும்புவதாகவும் உதயக்குமார் கூறியுள்ளாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications