அணு உலை உயிரை குடிக்கின்ற எமன், அதை இயங்கவிட மாட்டேன்: வைகோ

நெல்லை மாவட்டம் உவரியில் மணபாட்டில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோணி ஜான் கொல்லப்பட்டதை கண்டித்தும், கூடங்குளத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரியும் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடந்தது.
உவரியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
மக்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்காது. கூடங்குளம் அணு உலையை இயக்கக் கூடாது. அணு உலையில் யுரேனியத்தை நிரப்பக் கூடாது. அணு உலை உயிரை குடிக்கின்ற எமன். கடற்கரை மக்கள் அவர்களுக்காக போராடவில்லை. தமிழக மக்களுக்காக போராடுகிறார்கள். குழந்தைகளை முன்னிருத்தி போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். குழந்தைகள் தான் எதிர்கால சந்ததியினர். இந்த அணு உலையை நிச்சயமாக இயங்கவிட மாட்டேன். அணு உலையை நிறுத்துவதாக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
ரூ.13,000 கோடி செலவாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல், தற்போது கிரானைட் ஊழல் அவற்றை எல்லாம்விட இந்த ரூ.13,000 கோடி பெரிய தொகை அல்ல. முன்னாள் முதல்வர் தமிழக மக்களை நேசிப்பவர் அல்ல. அவர் தன் மக்களை மட்டும் நேசிப்பவர். இந்த உண்ணாவிரதம் உண்மையான உண்ணாவிரதம். உங்களுடன் கடைசிவரை நின்று போராடுவேன் என்றார்.
முன்னதாக அவர் துப்பாக்கிச்சூட்டில் பலியான மணப்பாடு மீனவர் அந்தோணி ஜானின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு மதிமுக சார்பில் ரூ.50,000 வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மருந்து வாங்க கடைக்குச் சென்ற அந்தோணி ஜான் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications